• Apr 16 2024

தூங்கினது ஒரு குற்றமா?- வாரிசு சூட்டிங் செட்டில் ராஷ்மிகாவை கழுவி ஊற்றிய விஜய் மற்றும் வம்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.வாரிசு படம இவருக்கு நநல்லதொரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.

விஜய்யின் தீவிர ரசிகையான இவர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பதையே பேராசையாகக் கொண்டிருந்தார். இவரின் இந்த ஆசை வாரிசு படத்தின் மூலம் நிறைவேறியது.


படத்தில் பெரிய ரோல் இல்லை என்றாலும் விஜய்க்காக அந்த படத்தில் நடித்ததாக ராஷ்மிகா பேட்டிகளில் கூறி இருந்தார்.வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி ராஷ்மிகா ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். சோபாவில் அமர்ந்து அவர் தூங்கிவிட்டாராம், அந்த நேரத்தில் இயக்குநர் வம்சி அவரை போட்டோ எடுத்து இருக்கிறார்.

அந்த போட்டோவை விஜய் இடம் காட்டி இருவரும் அதை வைத்து கலாய்த்து இருக்கின்றனர். இதனை ராஷ்மிகா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement