• Dec 08 2023

40 நாளா ஐஷு எதுவுமே பண்ணாம வெளிய போக காரணமே நீ தான்..! நிக்சனிடம் ஆவேசமாக பேசிய அர்ச்சனா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் விறுவிறுப்பாக இன்னும் ஒருசில நாட்களில் 50வது நாளை எட்டவுள்ளது. தற்போது இன்றைய நாளுக்காக முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, அதில் விசித்ராவிடம் ஆவேசமாக பேசிய நிக்சன் 'நான் ஐஷுவிடம் செய்தது தவறு என்றால் மணி - ரவீனா செய்வதும் தப்பு, விஷ்ணு - பூர்ணிமா செய்வதும் தப்பு' என்று கூறுகிறார்.

இதையடுத்து, 'மரியாதையா பேசு' என விசித்ரா சொல்ல, அதற்கு 'நீங்க மரியாத தந்தா தான் நானும் மரியாத தருவன், நீங்க யாரா வேணாலும் இருங்க' என நிக்சன் கூறினார். 'அர்ச்சனா தவறாக செல்வதற்கு காரணமே நீங்கதான்' என்றும் கூறுகிறார்

இதன் போது வந்த அர்ச்சனா '40 நாளு இந்த வீட்டில் ஐஷு எதுவுமே பண்ணாமல் இருந்ததற்கு காரணமே அவ நிக்சனோட இருந்தது தான் என்று கூறியதோடு, எல்லாரும் ஒரு நாள் வெளியே போகத்தான் போகிறோம், அன்னிக்கு போய் நீ ஐஸ்வர்யாவை போய் பாரு, அப்போ உனக்கு உண்மை புரியும்' என்று கூற திடீரென நிக்சன் அமைதியாகிறார்.

மொத்தத்தில் இன்றைய பிக்பாஸ் எபிசோடு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement

Advertisement

Advertisement