• May 22 2024

யோ அதான் உன் ஆளு சொன்னதை கேட்க மாட்டியா?- தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியாக தொடங்கி பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. இவர் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். 

இவர்களது திடீர் திருமணம் பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.குண்டாக இருக்கும் ரவீந்தரை அழகாக இருக்கும் மகாலட்சுமி எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது தான் அனைவரும் எழுப்பிய கேள்வியாக இருந்தது. 


மறுபுறம் அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாக விமர்சனங்களும் எழுந்தன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் ஜோடியாக பேட்டி அளித்து வந்தனர். அத்தோடு இருவரும் இணைந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது ரவீந்தர் ஓர் புகைப்படத்தைப் பதிவிட்டு அதில் வெறுப்பவர்களால் சூழப்பட்ட போதும் அன்பைப் பரவுவதன் மூலம் அன்பு இருப்பதை நிரூபிப்போம்.என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.




Advertisement

Advertisement