• May 19 2024

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா..? கௌதம் மேனன் கூறிய தகவல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராக தனக்கென தனி முத்திரையை பதித்தவர் கெளதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக கெளதம் மேனன் தன் முதல் படத்திலேயே வெற்றியை பெற்றார். இதைத்தொடர்ந்து ஆக்சன் களத்தில் இறங்கி காக்க காக்க படத்தை இயக்கினார்.

மேலும் இப்படம் சூர்யா திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கௌதமையும் அடுத்தகட்டத்துக்கு அழைத்து சென்றது என்று தான் கூற வேண்டும்.அதைத்தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என கிளாசிக் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக ஜொலித்தார்.

ஒரு பக்கம் காதல் படங்களையும், மறுபக்கம் த்ரில்லர் படங்களையும் இயக்கி ரசிகர்கள் மனதில் இயக்குநராக தனி இடத்தை பிடித்துள்ளார் கெளதம் மேனன். இந்நிலையில் கெளதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா.

த்ரிஷா நாயகியாக நடிக்க இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அத்தோடு கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் காலத்தால் அழிக்கமுடியாத காதல் காவியமாக மாறியது. கார்த்திக்காக சிம்புவும், ஜெஸ்ஸியாக த்ரிஷாவும் வாழ இப்படம் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம்பிடித்தது.

ஒவ்வொரு காதலர் தினத்தை முன்னிட்டும் இப்படம் சென்னையில் சில திரையரங்கில் மறுவெளியீடு செய்வபடுவது வழக்கமான ஒன்றாக மாறியது. எனினும் இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வருமென ரசிகர்கள் பல ஆண்டுகளாக கேட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது ஒரு விழாவில் பங்கேற்று பேசிய கெளதம் மேனனிடம் இந்த கேள்வியை ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கௌதம் மேனன், விண்ணை தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும்.

மேலும் அப்படத்தின் கதையை தற்போது உருவாக்கிவருகின்றேன் என்றார். இதைக்கேட்ட ரசிகர்கள் தற்போது விண்ணை தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தை கொண்டாட தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement