• May 07 2024

புஷ்பா 2 படத்தின் புதிய அப்டேட்… தீயாய் பரவும் தகவலால் குஷியான ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தான் புஷ்பா. இந்தத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அத்தோடு திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதில் சமந்தா ஒரு பாட்டுக்கு மாத்திரம் ஆடிய நிலையில் அது மிகபெரிய ஹிட் ஆனது.தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா திரைப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

புஷ்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதற்கிடையே வெளியான கே ஜி எப் 2 திரைபடம் இயக்குநர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து கே ஜி எப் 2 அளவிற்கு கதையை பிரமாண்டமாக மாற்றியுள்ள இயக்குநர் சுகுமாரன் தற்போது திரைக்கதையையே அதிரடியாக உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது புஷ்பா 2 படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement