பிக்பாஸ் வீட்டை வெளியேறி ஜி.பி.முத்துவைப் பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பி வருகிறது பிக் பாஸ். 100 நாட்கள் பிரபலங்களை ஒரு தனி வீட்டில் தங்க வைத்து அவர்களின் நடவடிக்கையை மொத்த உலகமும் கவனிப்பது தான் இந்த ஷோவின் நோக்கமே.
தற்போது தமிழில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்பவர்கள் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாவது வழக்கம். அந்த ஆசையில் தான் பலரும் இதில் பங்கேற்று வருகின்றன.தற்போது 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 துவங்கிய ஒரே வாரத்தில் சண்டை சச்சரவு என பல நாட்கள் ஒன்றாக இருந்தவர்களின் அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்து விட்டனர் போட்டியாளர்கள்.
இந்த சீசனில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருந்தவர் தான் ஜி.பி முத்து.இந்த நிகழ்ச்சியில் அவருடைய வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. அதனிடையே அவர் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தினந்தோறும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
அதே நேரத்தில் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்கமுடியவில்லை என தெரிவித்துவந்த GP முத்துவிடம் எவ்வளவு சமாதாகப்படுத்தியும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகின்றேன் எனக் கூறிய நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று வெளியேறி இருந்தார்.
இவ்வாறு இருக்கையில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் தனது மகனை பார்க்க வேண்டும் என்று நினைத்தது சரி தான் என்றும்.அது ஏன் என்றால் வெளியில் அவரது மகனுக்கு தீவிரமாக நோய் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் அவருடைய மனது அவரின் மகனை பார்க்க வேண்டும் என்று தேடி இருக்கிறது என அவரின் மகனது புகைப்படத்தை வெளியிட்டு கருத்து கூறி வருகிறார்கள்.
Listen News!