• May 02 2024

மீனாவின் கணவன் இறந்து இவ்வளவு நேரம் கழித்தும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வராததற்கு காரணம் என்ன?- சந்தேகம் கொள்ளும் பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி சினிமா நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் அறிமுகமான இவர் தனது நடிப்பினாலும் திறமையினாலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து கதாநாயகி என்ற அளவிற்கு உயர்ந்தார். கண்ணழகி என அழைக்கப்படுகின்ற மீனாவின் நடிப்பிற்கு மட்டுமன்றி அவரது அழகை ரசிப்பதற்கும் என்று பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமே உண்டு.

இவர் பார்த்திபன், விஜயகாந்த், அஜித், பிரபுதேவா, பிரபு எனப் பிரபல நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்த மீனாவிற்கும் பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களது சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக தற்போது நைனிகா என்ற அழகான மகள் ஒருவரும் உண்டு. நைனிகாவும் தற்போது குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த 27 ஆம் திகதி நடிகை மீனாவின் கணவர் சாகர் உயிரிழந்துள்ளார் இதற்கு காரணம் பெங்களூரில் இருந்த அவருடைய வீட்டிற்கு அருகே புறாக்கள் நிறைய வளர்க்கப்பட்டதாகவும், இந்த அலெர்ஜிக் சுவாச பிரச்சினையாக சாகருக்கு மாறியுள்ளதாகவும் இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது இறுதிச் சடங்குகளை மனைவியும் மகளும் செய்திருந்தனர்.

இந்நிலையில் வித்யாசாகரின் மரணம் தொடர்பாக யூடியூப் வீடியோ ஒன்றினூடாக பயில்வான் ரங்கநாதன் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. அதாவது "பெங்களூரில் குடும்பத்துடன் இருந்த மீனா திடீரென சென்னைக்கு வந்ததற்கான காரணம் என்ன? வித்யாசாகர் மரணமடைந்து இவ்வளவு நேரம் கழித்தும் மருத்துவமனை சார்பில் அறிக்கை எதுவும் முன்வைக்காததற்கான காரணம் என்ன?" என சந்தேகத்திற்கிடமான பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில் 'மீனாவும் அவரது மகள் நைனிகாவும் சினிமாவில் நடிக்க வந்தது வித்யாசாகருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இப்படி நிறைய கேள்விகள் கேட்பதற்கு உண்டு ஆனாலும் கணவனை இழந்த மீனா மீண்டும் திரும்பி வர வேண்டும்" எனவும் அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எனினும் பயில்வான் ரங்கநாதனின் இந்த வீடியோவை பார்த்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஏனெனில் மீனா தனது கணவனை இழந்து கொஞ்சநாள் கூட ஆகாத நிலையில் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து வருகின்றார் பயில்வான் ரங்கநாதன். யாராக இருந்தாலும் மனசாட்சியோடு பேச வேண்டும் என பயில்வான் ரங்கநாதனை குறை கூறியுள்ளனர். இந்நிலையில் எப்போதுமே நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதனுக்கு திரையுலகத்தை சேர்ந்த பல பிரபலங்களும் தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement