• May 19 2024

நாங்க தான் அப்பாவை ஹாஸ்ப்பிட்டலுக்கு போகச் சொன்னோம், ஆனால்..? கண்கலங்கி மாரிமுத்துவின் மகன் சொன்ன விஷயம்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஜி. மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். அதாவது ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். 

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு திரையுலகில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. 


இதனையடுத்து பலரும் அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் மாரிமுத்துவின் மகன் அகிலனும் தந்தை குறித்த நினைவலைகளை பகிர்ந்து வருகின்றார். 

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் அகிலன் கூறுகையில் "அப்பாவிற்கு இப்படி ஆகும் என்று கொஞ்சம் கூடி நினைக்கல, நாங்கள் மனதை திடப்படுத்திக் கொண்டாலும் அப்பா இறந்ததை தங்கையால் ஏற்றுக்கொள்ளவே முடியல" என்றார்.

மேலும் "அப்பாவிற்கு ஏற்கனவே நெஞ்சுவலி வந்த சமயத்தில் நாங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம். ஆனால் அந்த சமயத்தில் அப்பா வீட்டில் இருந்தால் எங்களை உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிந்தது" எனவும் கூறினார்.

அத்தோடு "இந்த முறை அப்பா தனக்கு நெஞ்சுவலிப்பதாக போன் செய்து முன்பைவிட அதிகமாக வலிப்பதாக கூறினார், இதனால் தான் நாங்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு போங்க நாங்க அங்க வந்துவிடுகிறோம் என்கிறோம், இதனைத் தொடர்ந்து தான் அப்பா தனியாக கார் ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அதுக்குள்ள இப்படி எல்லாம் ஆகும் என்று நாங்க நினைக்கல" எனவும் மனம் உடைந்து கூறியுள்ளார் அகிலன்.


மேலும் "சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் என் தங்கைக்கு வெளிநாடு போக வேண்டும் என்பது தான் அவங்க ஆசை, அந்த ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றனும், ஏனெனில் அப்பா இல்லாததால் எல்லாம் மாறிவிட்டதே என்று இரண்டு பேருமே வருத்தப்படக்கூடாது. அவங்களுக்கு நான் இருக்கேன், எங்களுக்கு அவங்க இருக்காங்க என்னால் முடித்ததை கண்டிப்பாக செய்வேன்" எனவும் அந்தப் பேட்டியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் மாரிமுத்துவின் மகன்.


இதனையடுத்து மாரிமுத்து ரசிகர்கள் இவருக்கு தங்களது ஆறுதலைக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement