• May 20 2024

பிரபல இயக்குநருடன் தனியாக பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற தமன்னா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.அந்த வகையில் தமிழில் இறுதியாக விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார்.


மேலும் சமீபகாலமாக படவாய்ப்புக்கள் குறைந்து கொண்டு செல்வதால் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார்.இது தவிர  ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக போலோ ஷங்கர் படத்திலும் தமன்னா நடிக்கிறார்.


மேலும் பப்ளி பவுன்சர் எனும் படத்திலும் தமன்னா நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கதையாகும். 


இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.


இந்நிலையில் இந்த பப்ளி பவுன்சர் படத்தின் இயக்குநர் மதுர் பண்டர்க்கர் உடன் தமன்னா மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பிள்ளையாருக்கு அரளிப்பூ, தேங்காய் சாற்றி வழிபாடு செய்தார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement