• Apr 28 2024

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'திரைப்படத்திற்கு பெயர் வைத்தது இவர் தானா?- வடிவேலு கூறிய ரகசியம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.இப்படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடித்து வருகின்றார். இவர்களுடன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு  சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை மற்றும் மைசூரில் நடந்தது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வடிவேலு பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில் " கொரோனா காலத்தில் உருவான கதை தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். முதலில் படத்திற்கு நாய் சேகர் என்ற தலைப்பு வைக்கப்பட்டது. பின்னர் ஏற்கனவே இந்த டைட்டில்  ஒரு படத்துக்கு வைக்கப்பட்டதால் மூன்று வேறு வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டன. 

மறுபடியும் நாய் சேகர், நாய் சேகர் கம்பேக், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என மூன்று தலைப்புகளில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பை தேர்வு செய்தது முதலாளி லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா தான். தற்போது இந்த தலைப்பு படத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளது" என வடிவேலு கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement