• Sep 20 2024

கமலிடம் விசித்திரா கேட்ட ஒரே ஒரு கேள்வி! ஆடிப்போன பிக்பாஸ்..! அதிருப்தியில் ரசிகர்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டிலுள்ள  நடிகை விசித்திரா சக போட்டியாளர்களின் முன்பு கமலிடம் கேள்வி ஒன்றை  கேட்டிருந்தார். 

அதாவது, பெண்களுக்கு பிரச்சனை என்றதும் ரெட் கார்ட் கொடுத்த நீங்கள் ஒரு வாரமாக சில பெண்களால் எங்களுக்கும் பிரச்சனை அதற்கு தண்டனை கிடையாதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

அதற்கு நடிகர் கமல்ஹாசன் யாரும் எதிர்பார்க்காத வகையில் புல்லி கேங்குக்கு எதிராக தன்னுடைய கருத்தை தெளிவாக எடுத்து வைத்திருந்தார். 



அதன்படி அவர் கூறுகையில், நான் எனது விருப்பப்படி பிரதீப்க்கு ரெட் கார்ட்  கொடுக்கவில்லை. அவருடன் இருந்த சக போட்டியாளர்கள் சொன்ன குற்ற சாட்டுகளாலும் அதை சொன்ன முறையாலும் தான் நான் ரெட் கார்டு கொடுத்தேன் என்று கமல் விளக்கம் கொடுத்திருந்தார். 

இப்படியாக இருக்கும் நிலையில் விசித்திரா யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டக் என்று ஒரு கேள்வியை கமலிடம் கேட்டிருந்தார். அதில் கமல் புல்லி கேங்கை விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். 

இதன் போது பேசிய விசித்தரா, கடந்த வாரம் பெண்களுக்கு ஒரு ஆணால் பிரச்சனை என்று சொல்லி பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தீங்க. ஆனால் ஒரு வாரமாக சில பெண்களால் எங்களுக்கு பிரச்சினையாக இருந்தது அப்போ அவங்களுக்கு தண்டனை கிடையாதா என்று கேட்டிருந்தார்.

அதற்கு கமல், ஏன் தண்டனை கிடையாது? இங்க அதிகமான ரெட் கார்ட் இருக்கிறது என்று கூறியிருந்தார். எனினும் புல்லி கேங்கிற்கு கடைசி வரை தண்டனை குடுக்கவில்லை கமல். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement