• May 04 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக விக்ரம் செய்த மாஸான விடயம்-குவிந்து வரும் பாராட்டுக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வேறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கக் கூடிய முக்கிய நடிகராக விளங்குபவர் தான் நடிகர் விக்ரம். இவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ரோலில் நடித்துள்ள விக்ரம், அடுத்ததாக கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. பிறகு அவருக்கு மாரடைப்பு கிடையாது என விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் விளக்கம் அளித்தார்.

இதயத்தில் லேசான அசவுகரியம் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துள்ளது.

இப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது, இப்படத்திற்கு இந்த ஐந்து மொழிகளிலும் விக்ரம் தான் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். மொழி தான் வெவ்வேறு தவிர அந்த வசனங்களில் உள்ள உணர்ச்சிகளை தனது சொந்தக் குரலில் பேசி அசத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவரைப் போல கமல்ஹாசனும் தனது சொந்தக் குரலில் தான் ஐந்து மொழிகளில் டப்பிங் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement