• May 18 2024

என்னை மனிதனாக வைத்ததற்காக நன்றி- சமந்தாவை மிஸ் செய்கின்றாரா நாக சைத்தன்யா?- வைரலாகி வரும் புதிய பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு தமிழ் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகசைத்தன்யாவைத் திருமணம் செய்திருந்ததோடு தற்பொழுது விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழுகின்றார். இவர்கள் விவாகரத்து பெற்று 9 மாதங்கள் ஆகி விட்டன.

அத்தோடு இந்தத் தம்பதியினர் மீண்டும் இணைவர்களா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. இருப்பினும் இருவரும் இதையெல்லாம் பொருட்டாக எண்ணாது தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாக சைதன்யாவின் தேங்க் யூ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து அவர் தனது வாழ்க்கையில் முக்கியமானவர்களுக்கு இன்ஸ்டகிராமில் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது அம்மா, லட்சுமி டகுபதி, அவரது அப்பா நாகார்ஜுனா மற்றும் சமந்தா-நாகசைத்தன்யாவின் செல்ல பிராணி ஹாஷுடன் எடுத்துக் கொண்ட படங்களை பகிர்ந்து அதில் தன்னை வேரூன்ற வைத்திருப்பதற்கும், எந்த நிபந்தனையுமின்றி அவரை நேசித்ததற்கும் தனது அம்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் .

அத்தோடு நாக சைதன்யா தனது அப்பா தன்னுடைய நண்பர் போன்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.செல்லப் பிராணியான ஹாஷுக்கு, அவர் எழுதிய குறிப்பில், "ஹாஷ் - எப்படி நேசிக்க வேண்டும் என்பதை என்னை உணரச் செய்ததற்காக, என்னை மனிதனாக வைத்ததற்காக நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

ஜிம்மில் உள்ள படங்கள் முதல் ஹாஷுக்கு அழகான பிறந்தநாள் விழாக்களை கொண்டாடுவது வரை, அவர்கள் நாய் மீது தங்கள் அன்பைப் பொழிந்தனர்.இப்போது, ஹாஷ் சமந்தாவுடன் வசித்து வருகிறது.நாக சைத்தன்யாவின் இந்த போஸ்ட்டைப் பார்த்த ரசிகர்கள் நாகசைத்தன்யா ஒரு நாய் குட்டியை இவ்வளவு மிஸ் பண்ணும் போது, நிச்சயமாக சமந்தாவையும் மிஸ் செய்வார் என்றும் குறிப்பிட்டதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement