• May 04 2024

விஜய்க்கு ஏதாவது சின்ன ரோல் கொடுங்க என அவரது அப்பா என்னிடமே கேட்டிருக்கிறார்- பளிச் என்று கூறிய பார்த்திபன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்பொழுது இரவின் நிழல் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றார்.இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

அதாவது விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. விரைவிலேயே அது நிறைவேறும் என்றும் நினைக்கிறேன் என பேசி உள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

விஜய் நடிகரானதே மிகப்பெரிய ஸ்க்ரீன்ப்ளே. விஜய்க்கு ஏதாவது சின்ன ரோல் கொடுங்க என அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் என் வீட்டு பார்ட்டிகளில் எல்லாம் கேட்பார். விஜயகாந்த் படங்களில் விஜய் அப்படித்தான் அறிமுகமானார். ஆனால், அந்த நிலைமை எல்லாம் எப்போவோ மாறி இன்றைக்கு விஜய் ஒரு டிசைடிங் ஃபேக்டராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வளர்ந்து நிற்கிறார் என்று பேசி உள்ளார்.

அழகிய தமிழ் மகன் படத்தில் நடிகர் விஜய் கவிஞராக நடித்து இருப்பார். அந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அவர் கவிதை சொல்லிக் கொடுக்க, அந்த கவிதைக்கு பரிசு கிடைக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். அந்த படத்திற்கு கவிதைகளை எழுதிக் கொடுத்ததே பார்த்திபன் தானாம். கவிதையாக இருக்க வேண்டும் என்றால் வைரமுத்துவிடம் சென்றிருப்பார். நக்கல், கிண்டல் கவிதையாக வேண்டும் என்றதால் என்னிடம் கேட்டார். நானும் ஒரு 15 முதல் 20 நாட்களில் எழுதிக் கொடுத்தேன் என பல அரிய தகவல்களை அவிழ்த்துள்ளார்.

3 இடியட்ஸ் படத்தை தமிழில் பண்ணப் போறேன். அந்த படத்தை, நீங்க இயக்கிக் கொடுங்க என நடிகர் விஜய் முதலில் என்னிடம் தான் அணுகினார். ஆனால், அந்த சமயத்தில் என்னால் அந்த படத்தை இயக்க முடியாமல் போய் விட்டது. இயக்குநர் ஷங்கர் அதை அவ்வளவு கலர்ஃபுல்லாக இயக்கியதை பார்த்தால், இந்த அளவுக்கு நான் இந்த படத்தை பண்ணியிருக்க மாட்டேன் என உணர்ந்தேன் என்றார்

ஆனால், நண்பன் படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்லா போகல, அந்த படம் ஃபிளாப் தான் என பட்டென பளிச்சென போட்டு உடைத்து விட்டார் பார்த்திபன். ஒரு வேளை நான் அந்த படத்தை இயக்கி இருந்தால், அந்த அளவுக்கு கலர்ஃபுல்லாக வந்திருக்குமான்னு தெரியல.. ஆனால், வேறு விதமா ஒரு ஃபீல் குட் மூவியாக கொடுத்திருப்பேன்னு தோணுது என்றார்.இரவின் நிழல் படத்தில் நானே நடிக்காமல், வேறு ஒரு ஸ்டார் ஹீரோவை போட்டு இயக்கி இருந்தால், அந்த படத்தின் பிசினஸ் பெரிதாக இருந்திருக்கும். நடிகர் விஜய்யையும் இயக்க எனக்கு ரொம்பவே ஆசை தான். ஆனால், இப்போ இருக்குற நிலைமையில், விஜய், தனுஷ் உள்ளிட்டவர்கள் அவர்களாகத்தான் இயக்குநர்களை தேர்வு செய்யும் இடத்தில் உள்ளனர். அப்படி பார்த்திபன் வாங்க ஒரு படம் பண்ணலாம் என அழைத்தால், அப்பவும் வித்தியாசமான படங்களில் அவர்களை எப்படி காட்டலாம் என்று தான் நினைப்பேன் என மனதில் பட்டதை பளிச்சென பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement