• Jul 27 2024

பணம் சம்பாதிக்க தான் விஜய் திடீரென அரசியலுக்கு வந்தார்! அடித்து கூறும் பிரபல நடிகரின் தந்தை

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், தற்போது உச்சகட்ட அந்தஸ்தை பெற்ற முன்னணி நாயகனாக தமிழ் சினிமாவில் திகழ்கிறார்.

தமிழக வரலாற்றை பொறுத்தவரையில் சினிமா துறையில் நடிக்கும் நட்சத்திரங்களில் சிலர். அரசியலில் களமிறங்கி சிஎம் நாற்காலியை பிடிப்பது எம்ஜிஆர் காலம் முதற்கொண்டு தற்போது வரையில் தொடர்ந்து வருகின்றது.

இந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்த், இயக்குனர் சீமான், உலகநாயகன் கமலஹாசன் என பலரும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று ஆர்வத்தோடு அரசியலில் களம் இறங்கினார்கள்.

ஆனாலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது உடல் நலத்தை கருதிக் கொண்டு அரசியலில் இறங்கவில்லை. ஆனாலும் படங்களில் நடித்து வருகிறார்.


அடுத்து இளைய தளபதி விஜய் எப்போது அரசியலில் இறங்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்து அளிக்கும் வகையில், தனது 'தமிழக வெற்றி கழகம்' என்ற புதிய கட்சி பெயருடன் பிரம்மாண்டமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் விஜய்.

நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைமைகள் பலரும் விஜய் ஆதரவாக வாழ்த்து தெரிவித்தாலும், அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஷாலின் தந்தை தற்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதன்படி அவர் கூறுவையில், நடிகர் விஜய் அரசியல் வருவதற்கு முன்பு தனது தேவையான பணத்தை கோடிக் கணக்கில் சேர்த்து வைத்து விட்டு தான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார்.

என்னுடைய மகனும் அப்படித்தான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் அரசியலும் என் மகனின் அரசியலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.


இவ்வாறு நடிகர் விஜய் பணம் சேர்த்து விட்டு தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று அவர் கூறிய விஷாலின் தந்தைக்கு, அப்படி என்றால் பணம் சம்பாதிக்க தான் நடிகர் விஜய் அரசியலுக்கு தற்போது வந்துள்ளார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று தளபதி ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் அவர் இதற்கு அவர் பதில் அளிக்க தவறிய பட்சத்தில், அவரது பதிலுக்காக காத்திருக்கிறார்கள். அவர் இதற்குரிய சரியான பதிலை அளித்தாலே அவர் சர்ச்சைகளில் இருந்து தப்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement