பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை, தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.இவர் வித்தியாசமான கதைகளை உலகிற்கு கொடுப்பதில் கை தேர்ந்தவர்.
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியு, குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இவர்களது கேரக்டர் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் இப்படத்தின் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலானது.
அத்தோடு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற நாவலை அடிப்படையாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம்.மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளையும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்க முயற்சித்தபோது அதில் நடிகர் விஜய்யையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்.
மேலும் இதில் அவர் வந்தியத்தேவன் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இதில் கமிட் ஆகிவிட்டால் இப்படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது, அதிக நாள் கால்ஷீட் தர வேண்டும் என மணிரத்னம் கூறியதால், இது நமக்கு செட் ஆகாது என விஜய் விலகி விட்டாராம். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார்.
பிற செய்திகள்
- நடிகர் அஜித், மகளுடன் மதுபானக் கொண்டாட்டமா..?கடும் விமர்சனங்களுக்கு உள்ளான புகைப்படம்..!
- கோர்ட்டில் இருந்து வந்த நோட்டீஸ்.. கோபியை அடிக்க பாய்ந்த எழில்- இன்றைய எபிசோட் அப்டேட்
- ப்பா..என்ன ஒரு அழகு..திருமணக் கோலத்தில் பாரதி கண்ணம்மா வினுஷா-வைரலாகும் வீடியோ..!
- லைகர்” படத்தின் பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ்…!
- அந்த வதந்தி உண்மைதான் -உண்மையை உடைத்த ராஷ்மிகா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!