• May 02 2024

செய்தியாளர்களைச் சந்தித்த விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாரா- என்ன சொல்லியிருக்கிறாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 7 வருடங்களாக நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் அரசியல்வாதிகள் நண்பர்கள் உறவினர்களோடு இனிமையாக நடைபெற்று முடிந்தது. இவர்களை வரவேற்பு நிகழ்ச்சியும் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

மேலும் திருமணம் முடிந்த கையோடு இருவரும் நேற்றைய தினம் திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருந்தனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.

அதே போல இன்றைய தினம் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்ததோடு தங்களின் திருமணத்திற்கும் சினிமாப் பயணத்திற்கு ஆதரவளித்ததற்கு ரொம்ப நன்றி என்று கூறியுள்ளனர். மேலும் தங்கள் பணிக்கு உங்கள் ஆதரவு இன்னும் தேவை என அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement