• Dec 19 2025

வெடித்தது திரிஷா-மன்சுயூர் விவகாரம்... விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்... வக்கீல் நோட்டிஸ் அனுப்பிய காவல் துறை...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் லியோ படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் அவருடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியும் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவை போட முடியவில்லை என செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.


இந்த நாசூக்கான பேச்சால் கொந்தளித்த திரிஷா கண்டித்து டுவிட் செய்திருந்தார்.மேலும் த்ரிஷாவுக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.இவரின் இந்த பேச்சுக்கு, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, வானதி ஸ்ரீனிவாசன், சிரஞ்சீவி, உட்பட பல பிரபலங்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூல் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இருப்பினும் நடிகர் சங்கம் தவறு செய்து விட்டது.என்னிடம் எதுவும் விசாரிக்காமல் மன்னிப்புக் கூற சொல்லி விட்டார்கள். தமிழ் நாடே தன் பக்கம் இருக்கின்றது நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார் மன்சுயூர் அலிகான்.


இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் விசாரணைக்கு வரவே நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக வேண்டும் என வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டது.  நாளை நேரில் ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் வழங்கிய போலீசார் மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மன் வழங்கினர். 

Advertisement

Advertisement