• Apr 20 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முக்கிய போட்டியாளர்- அதிகாரப்பூர்வமாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.13வது வாரத்தில் நடத்தப்பட்ட டிக்கெட் டூ பினாலே டாஸ்க், நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது.

பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் போட்டியாளர்களிடையே அடிக்கடி சண்டைகளும் நடந்தன.டிக்கெட் டூ பினாலே போட்டியில் அதிகமான டைல்ஸ்கள் பெற்று அமுதவாணன் முதலிடம் பெற்றார்.


தொடர்ந்து இந்த வாரம் இறுதியாக நடந்த பிபி கிரிட்டிக்ஸ் அவார்டு டாஸ்க்கில், ஒவ்வொரு பட்டங்களுக்கும் யார் பொருந்துவார்கள் என போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் அசீம்க்கு விக்ரமன் கிரிஞ்ச் அவார்டு கொடுத்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. என்கிட்ட இந்த பாச்சாலாம் பலிக்காது. இத அப்படி நீங்களே மாட்டிக்கோங்க என அசீம் விக்ரமனை டிரிக்கர் செய்தார்.

இதனிடையே இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இதில், அமுதவாணன் தான் குறைவான வாக்குகளுடன் எவிக்சன் ஆகும் நிலையில் இருந்தார். ஆனால், டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிப் பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டார். 


இதனால் இந்த வாரம் எவிக்சனில் இருந்த அமுதா, அதிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். எனவே அவருக்கு அடுத்து குறைவான வாக்குகள் பெற்றுள்ள ரச்சிதா தான் வீட்டை வீட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement