• Apr 28 2024

இன்று மறைந்த தோனி பட நடிகர் சுஷாந்த் சிங் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவுதினம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகராக அறிமுகமாகி பாலிவூட் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் .இவர் 1986 ஜனவரி 21 பிறந்தார் . 'தேஷ் மேன் ஹாய் மேரா தில்' என்ற தொடரில் நடித்து அறிமுகமானார். 2009ஆம் ஆண்டு பவித்ர ரிஷ்தா தொடரின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனைத் தொடர்ந்து 2011 பாலிவூட் நாயகனாக அறிமுகமானர். 'ஷுத் தேஸி ரொமான்ஸ் ', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' ஆகிய படங்கள் மூலம் பாலிவூட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் வளர்ந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட எம்எஸ் தோனி அண்ட் நோட் ஸ்டோரி என்ற திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி நாடு முழுவதும் பிரபலம் அடையச் செய்தது.

இவரது நடிப்பில் இறுதியாக "சிச்சோரே" என்ற திரைப்படம் இவ் உயிருடன் இருக்கும் போது வெளியானது. இந்த படத்திற்கு தேசிய விருதும் பெற்றார்,

இவ்வாறு சினிமா துறையில் தனக்கென ஓர் இடத்தில் இருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஜூன் 14 அன்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்றுடன் இவர் இறந்து 2 வருடங்கள் ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement