• May 20 2024

"இதுக்காக தான் BIGGBOSS வீட்டுக்குள்ள நுழைந்தேன்".. உண்மையை போட்டுடைத்த ஜி.பி. முத்து!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும்  இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அத்தோடு  கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.எனினும்  தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.மேலும்  இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.



இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  ஜி.பி. முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் தான் நுழைந்த காரணத்தை கூறியுள்ளார். "பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தால் முட்டை வைத்து ஆம்லேட் போட்டு  சாப்பிடலாம். எண்ணெய் வச்சு வடை சுட்டு உங்களுக்கு கொடுக்கலாம் என நினைச்சு வந்தேன். ஆனால் இங்கே வந்து நல்லா சாப்பிடலாம்னு பார்த்தா உப்புமாக்கு கூட வழி இல்லை" என ஜி.பி. முத்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவி சிரிப்பலையை ஏற்படுத்தி வருகின்றது.

Advertisement

Advertisement