கடந்த 2005ல் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி.இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.
மனநல பிறழ்வால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பனின் மனைவியை அதிலிருந்து மிகவும் புத்திசாலித்தனமாக அவர் காப்பாற்றுவதாக கதைக்களம் காணப்பட்டது. இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
லைக்கா தயாரிக்கவுள்ள இப்படத்தில் ரஜினிக்கு பதில் லாரன்ஸ் இணைந்துள்ளார்.மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நடிகர் லாரன்ஸ் தனது குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இந்த நிலையில், சந்திரமுகி-2 படத்தின் ரஜினி ஏன் நடிக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கன்னடத்தின் வெளியான சந்திரமுகி1( ஆப்தமித்ரா) வெற்றியைத் தொடர்ந்து, சில நாட்களில் இப்படத்தில் நடித்த சௌந்தர்யா காலமானார்.
(ஆப்தமித்ரா-2 )படத்தில் நடித்த நடிகர் விஸ்ணுவர்தனும் சில நாட்களில் காலமானார்.அத்தோடு இந்த சென்டிமென்டை அடிப்படையாகக் கொண்டு நடிகர் ரஜினி காந்த் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பிற செய்திகள்
- தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!
- யாருப்பா இந்த கிளியோபாற்றா…. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- என்னம்மா இது..முழு அங்கத்தையையும் காட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஷெரின்
- வீட்டுக்கு வந்து பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. மிரண்டு போன குடும்பத்தினர் – இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் – பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!