• May 22 2024

நான் இரண்டாவது பிள்ளையை பெற்றுக் கொண்டதற்கு இது தான் காரணம்- வெளிப்படையாகக் கூறிய கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தியின் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் விருமன். இப்படத்தில் சங்கரின் மகளான அதிதி சங்கர் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ப்ரமோஷனுக்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கார்த்தி  இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வதன் அவசியத்தை கூறியிருக்கிறார்.அதாவது நடிகர் சூர்யாவும் கார்த்தியும் அண்ணன் தம்பிகள் என்பது ஊர் அறிந்த விஷயம். இவர்கள் இருவருக்கும் பிருந்தா என்கிற ஒரு தங்கையும் உண்டு.


 பிருந்தா சிவகுமாரும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மிஸ்டர் சந்திரமௌலி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், ஓ2 போன்ற படங்களில் பின்னணி பாடகியாக பாடல்கள் பாடியுள்ளார்.

நடிகர் கார்த்திக்கு உமையாள் என்கிற மகள் முதலில் பிறந்தார். தங்களுக்கு ஒரு குழந்தை போதும் என்று முடிவு எடுத்திருந்தார்களாம் கார்த்தியும் அவரது மனைவியும். ஒருமுறை தனக்கு உடல்நிலை சரியில்லாத போது தனது தங்கை அவருடைய சொந்த பிள்ளைகளை விட்டுவிட்டு என் பிள்ளையை வந்து பார்த்துக் கொண்டார். 


அதேபோல என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நான் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் என் மனைவியின் தம்பி மருத்துவமனையில் தனது அக்காவிற்கு துணையாக நின்றார். அதுவும் அவரது திருமண நேரத்தில். அப்போதுதான் உடன்பிறப்புகள் எவ்வளவு முக்கியம் என்று தான் உணர்ந்ததாகவும் அதன் பிறகு தான் தனது இரண்டாவது பிள்ளை கந்தன் பிறந்தார் என்றும் கார்த்தி ஒரு நிகழ்வில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement