• May 08 2024

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவனைப் பிரிய இது தான் உண்மைக் காரணமாம்- ஏமாந்து போன அவரது கணவர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் நடித்து பிரபல்யமானவர் தான் ரச்சிதா. இதனைத் தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து வந்தார். மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு தினேஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லாத காரணத்தால் தினேஷ் மனமுடைந்து உள்ளார் என்று செய்தி வெளியானது. மேலும் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் ரச்சிதாவுக்கு சீரியல் வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது.

இதனால் இவர்கள் இருவருக்கும் மனரீதியாக சண்டைகள் உருவானதையடுத்து இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் பிரிவிற்குரிய காரணம் வெளியாகியுள்ளது.

அதாவது ரச்சிதா சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு குடும்பத்தில் கவனம் காட்டினால் குழந்தை பெற்றுக்கொண்டு நன்றாக வாழலாம் என்பதே தினேஷின் ஆசையாக இருந்ததாம். ஆனால் ரச்சிதா தன் நடிப்பு திறமையை விட்டுவிட முடியாது என்பதில் தீர்மானமாக உள்ளாராம்.

இதுவே இவர்களின் பிரிவிற்கு முக்கியமான காரணமாக உள்ளது என சின்னத்திரை வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement