• May 19 2024

ஆபத்தானவராக மாறி களமிறங்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம்... அப்பத்தா சொன்ன உண்மை... வெளியானது சூப்பர் ப்ரோமோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் அப்பத்தா கையில் ஏதோ ஒரு லெட்டரை வைத்துப் படித்துக் கொண்டிருக்கின்றார். மறுபுறம் ஜான்சிராணியும் குணசேகரன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றார். மேலும் நந்தினி அப்பத்தாவிடம் "குணசேகரன் இதெல்லாம் புதுசாவா பண்ணிட்டு இருக்கார், இந்த டிராமாவை தான் அடிக்கடி பண்ணுறாரே" எனக் கூறி சினக்கின்றார்.


பதிலுக்கு அப்பத்தா "இந்த தரமும் குணசேகரன் திரும்ப வருவான், ஆனால் வரப்போற குணசேகரன் ரொம்ப ஆபத்தான ஆளாக வரப்போறான்" என்கிறார்.


மறுபுறம் ஜான்சிராணியை இந்த வீட்டிலேயே இருக்குமாறு விசாலாட்சி கூறுகின்றார். அதற்கு நந்தினி "அத்தை கண்டவளையும் கூட்டிற்று வந்து நடு வீட்டில் வைக்கிற எண்டுறீங்க" எனக் கூறிக் கத்துகின்றார். பதிலுக்கு விசாலாட்சி "கண்டவங்களோட கூத்தடிச்சு தான் என் பிள்ளையை நான் தொலைச்சிட்டு நிற்கிறேன்" எனக் கூறி அழுகின்றார். இதைக் கேட்டதும் நந்தினி உட்பட மற்ற பெண்களும் ஷாக் ஆகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


எனவே இந்தப் ப்ரோமோவில் அப்பத்தா கூறியதை வைத்துப் பார்க்கும் போது எதிர்நீச்சல் சீரியலில் மீண்டும் குணசேகரன் கதாபாத்திரம் வரப்போகிறது என்பதும், ஆனால் அவர் ரொம்பவும் ஆபத்தனா ஒருவராகத் தான் இருப்பார் என்பதும் தெளிவாகின்றது. 

Advertisement

Advertisement