• May 19 2024

வாய்ப்புத் தாரேன் என்று சொன்னாங்க இப்போ மொத்தமா மாறிட்டாங்க- சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபு குறித்து மனம் திறந்த நடிகர் பாண்டி

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற ஆரம்பித்தார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. முதலில் காமெடி கதாநாயகனாக அறிமுகமானாலும் தொடர்ந்து சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார். அப்படி நடித்த திரைப்படங்களில் டாக்டர் முக்கியமான திரைப்படமாகும்.


ஆரம்பக்காலக்கட்டத்தில் விஜய் டிவியில் பணிப்புரிந்தபோது நடிகர் ப்ளாக் பாண்டியுடன் நல்ல பழக்கத்தில் இருந்தார் சிவகார்த்திகேயன். ப்ளாக் பாண்டி விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் நாடகம் மூலமாக அப்போது பிரபலமாக இருந்தார்.

ஆனால் சிவகார்த்திகேயன் அளவிற்கு ப்ளாக் பாண்டிக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதுக்குறித்து தற்சமயம் பேட்டி ஒன்றில் அவர் பேசியிருந்தார். இதுக்குறித்து அவர் பேசும்போது ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபுவுடன் நான் நல்ல பழக்கத்தில் இருந்தேன்.


சிவகார்த்திகேயன் எனக்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் தருவதாக கூறினார். ஆனால் எனக்கு பதிலாக சூரியை படத்தில் நடிக்க வைத்துவிட்டார். ஆனால் கஷ்டக்காலத்தில் இருக்கும்போது அவர் பண உதவி எல்லாம் செய்தார். ஆனால் யோகிபாபுவோ ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. இப்போது மொத்தமாக மாறிவிட்டார் என ப்ளாக் பாண்டி கூறியுள்ளார்.


Advertisement

Advertisement