• May 20 2024

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நடிகை ஹன்சிகா வீட்டில் நடந்த சோக நிகழ்வு- யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா தனது நீண்ட நாள் காதலனான சொஹைல் கத்தூரியா என்பவரை டிசம்பர் மாதம் 4ம் திகதி மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் விமரிசையாக ஜெய்ப்பூரில் நடைபெற்றது

ஹன்சிகா அவரது தோழியின் முன்னாள் கணவரை தான் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். திருமணம் முடிந்து தற்போது  அவரது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார். நடிப்பதை நிறுத்தப்போவதில்லை தொடர்ந்து நடிப்பேன் என கூறி இருக்கும் ஹன்சிகா அடுத்து பல படங்களில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார்.


இந்த நிலையில் திருமணம் நடந்த அடுத்த ஒரே வாரத்தில் தற்போது ஹன்சிகாவின் சகோதரர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.இதனால் ஹன்சிகா திருமணம் முடித்த ஒரே வாரத்தில் குடும்பத்தினர் சோகம் அடைந்து இருக்கின்றனர். 

மேலும் ஹன்சிகா இறுதியாக மஹா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இது இவருடைய 50வது படம் என்பதோடு இப்படத்தில் சிம்புவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement