• May 07 2024

கணவனின் புகைப்படத்தை வெளியிட்டு சிம்ரன் கூறிய விசயம்-வைரலாகும் பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உயிர் கொடுத்தவர் அன்னை என்றால் உலகை அறிமுகப்படுத்தியவர் தந்தை. குடும்பம் என்ற சிலையை உருவாக்க தன்னையே சிற்பியாக மாற்றிக் கொள்பவர்கள் தந்தையர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ஆவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நாளான இன்று பல முன்னணி திரைப் பிரபலங்களும் தங்களது தந்தைக்கு வாழ்த்துக் கூறுவதோடு மட்டுமல்லாமல், தந்தை ஸ்தானத்தில் இருக்கும் தமது கணவன்மாருக்கும் வாழ்த்துக்களைக் கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இடுப்பழகி என வர்ணிக்கப்படும் நடிகை சிம்ரனும் தனது கணவனுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் கணவனுடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு "ஹாப்பி பேர்த்டே தீபக், அன்ட் ஹப்பி பாதர்ஸ் டே" என அழகான பதிவொன்றினையும் இட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement