இளம் நடிகர் திரு வீர் நடிப்பில் உருவாகி வரும் “ஓ சுகுமாரி” திரைப்படம் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகில் முக்கியமான இடத்தைப் பெற உள்ளார்.

இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநரான பரத் தர்ஷன் எழுதி இயக்குகிறார். புதிய கதைக்களத்துடன் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மகேஷ்வர ரெட்டி மூலி இப்படத்தை தயாரிக்கிறார். இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘சங்க்ராந்திக்கு வஸ்துன்னம்’ போன்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகு, ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் கதாநாயகியாக நடிக்கும் முக்கியமான படமாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், “ஓ சுகுமாரி” படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!