• May 20 2024

நடிகை அனுஷ்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை-ஷாக்கான ரசிகர்கள்-ஏன் இப்படியொரு முடிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் முக்கிய நடிகையாக திகழ்ந்த அனுஷ்கா தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இவருக்கு தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.

அறிமுக படைத்தத் தொடர்ந்து இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி இருந்தன. எனினும் அவற்றுள் பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறி வெற்றி பெற்றன.

இவர் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருந்தார். அது மட்டுமல்லாது அவருடைய உயரமும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர பட வாய்ப்புகளும் வந்து குவிந்த வண்ணமே இருந்தன.

இந்த நிலையில் நிசப்தம் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்த அனுஷ்கா, அதையடுத்து ஒரு இளவட்ட தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

மேலும் இப்படியான நிலையில் தற்போது ஒரு காமெடி படத்தில் அனுஷ்கா நடிக்க போவதாக டோலிவுட்டியில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. எனினும் இதற்கு முன்பு பெரிதாக காமெடி வேடங்களில் நடிக்காத அனுஷ்கா, இந்த படத்தில் முழு நீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அத்தோடு இந்த தகவல் வெளியாக ஒருசில ரசிகர்கள் நல்லது .உங்களுடைய அந்த நடிப்பையும் பார்த்திடலாம் என கூறுகின்றனராம்.மற்றும் சிலர் ஏன் இப்படியொரு முடிவு என கேட்டு வருகிறார்களாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement