தமிழ் சினிமாவில் போடா போடி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் விக்னேஷ் சிவன். இவர் தனது இயக்கத்தில் வெளியான 'நானும் ரவுடிதான்'படத்தில் நடித்த நடிகை நயன்தாராவை பல வருடங்களாகக் காதலித்து இந்த ஆண்ட திருமணம் முடித்துக் கொண்டார்.
நயன்தாராவும் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.இவர்கள் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றதோடு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட சிறப்பித்தனர்.சில மாதங்களாக ட்ரெண்டிங் ஜோடியாகவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தனர்.
மேலும் திரமணத்திற்கு முதல் நிச்சயதார்த்தம் முடிந்த விட்டதாக நயன்தாரா ஒரு இன்டர்வியூவில் தெரிவித்திருந்தார்.ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்திருந்தாலும் திருமணம் மிகவும் பிரமாண்டமாக செய்ததால் ரசிகர்கள் திருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பல்வேறு சர்ச்சைகளும் இவர்களை சுற்ற தொடங்கியது. அதாவது திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், அதேபோல் கணவன் - மனைவி, இருவரில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.
ஆனால் திருமணம் ஆன 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி இந்த முடிவெடுக்க காரணம் என்ன? இவர்கள் முறையாக நிபந்தனைகளை பின்பற்றி குழந்தை பெற்றுள்ளார்களா அல்லது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை மீறப்பட்டுள்ளதா என பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்த பிரச்சனை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. மேலும் நயன் - விக்கி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள உதவிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது இருவரும் விசாரணை குழுவிடம் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர். பின்னர் தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டுள்ள ட்விஸ்டை கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்க்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.அத்தோடு இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!