ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் விஜய் டிவியில் பிரமாண்டமாக ஆரம்பமாகிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.இந்த நிகழ்ச்சியானது 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.முதல் நாளே டாஸ்க் கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் திணறிப் போனார்கள்.
இதனைத் தொடர்ந்து பல டாஸ்குகள் கொடுக்கப்படுவதால் அடிக்கடி பேட்டியாளர்களுக்கிடையில் மோதலும் ஏற்பட்டு வருகின்றது.இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களிடையே பிக்பாஸ் பின்னணியில் ஒலிக்கும் குரலுக்கு பெரிய ரசிகர்கள் உண்டு. அப்படி பிக்பாஸுக்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்து வருபவர் சாஷோ என்ற சதீஷ் சாரதி சச்சிதானந்தம்.
கடந்த ஐந்தாவது சீசனில் மாதம் ஒன்றுக்கு ஜந்து லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் ஒரு லட்சம் உயர்த்தி ஆறு லட்சம் ரூபாய் அவருக்கு கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு இருபதாயிரம் ரூபாய் என்று கூறப்படுகின்றது. மேலும் கமலின் சம்பளமும் இந்த சீசனில் உயர்த்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.அத்தோடு இந்த சீசனிலும் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!