• Apr 15 2026

வதந்திகளுக்குப் பின்னால் நிகழும் மர்மம்.. அதிகளவான பார்வைகளைக் குவித்த 'வதந்தி 2' டீசர்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

2022ஆம் ஆண்டு வெளியான கிரைம் திரில்லர் வெப் தொடரான “வதந்தி” தமிழ் ஓடிடி உலகில் தனித்துவமான இடத்தை பிடித்தது. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவான இந்த தொடர், Amazon Prime Video தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, S. J. சூர்யா தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அவருடன் லைலா, சஞ்சனா, நாசர் போன்ற திறமையான நட்சத்திரங்களும் இணைந்து நடித்திருந்தனர்.


முதல் சீசனின் வெற்றி, இரண்டாவது சீசன் மீது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது. அதனை தொடர்ந்து, தற்போது “வதந்தி 2” உருவாகியுள்ளது. இதுவும் அதேபோல கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி, மேலும் தீவிரமான கதைக்களத்துடன் வரவிருக்கிறது. வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் குஹபிரியா, எஸ் நந்தகுமார் மற்றும் கவுதம் செல்வராஜ் இணைந்து இந்த தொடரை தயாரித்துள்ளனர்.

முக்கியமாக, முதல் சீசனை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஏனெனில், முதல் பாகத்தில் அவர் கையாள்ந்த கதை சொல்லும் முறை மற்றும் திரில்லர் அம்சங்கள் பாராட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில், “வதந்தி 2” தொடரின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் வெளியான உடனே சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த டீசரில், சசிகுமார் முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. அவரது தீவிரமான தோற்றம் மற்றும் நடிப்பு, இந்த சீசனில் கதைக்கு மேலும் விறுவிறுப்பை கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசர் மூலம் கதையின் மையம் இன்னும் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், குற்ற விசாரணை, சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது. இதுவே ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இன்னும் “வதந்தி 2” தொடரின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், டீசர் பெற்றிருக்கும் வரவேற்பை பார்க்கும்போது, இந்த தொடர் வெளியானதும் பெரிய அளவில் பேசப்படும் என்பது உறுதி.


Advertisement

Advertisement