• May 12 2024

தனது அம்மா மற்றும் தங்கையுடன் கண்ணாடி முன் நின்று லாஸ்லியா எடுத்த லேட்டஸ்டான போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையைச் சேர்ந்த பத்திரிகை வாசிப்பாளராக இருந்தவர் தான் லாஸ்லியா மரியநேசன்.இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட்ட ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவினுடன் காதல் வயப்பட்டார். இதனால் அவரது அப்பா வந்து லாஸ்லியாவை திட்டியது எல்லாம் ரசிகர்களிடையே மிகவும் பேமஸ் எனலாம். இப்போது கவினுடனான கதாலை பிரேக் அப் செய்து விட்டு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

இது தவிர தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகின்றார்.சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது தனது அம்மா மற்றும் தங்கையுடன் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா இந்தியாவில் இருக்கின்றாரா?அல்லது இலங்கையில் இருக்கின்றாரா? எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement