• May 05 2024

பிரபல நடிகரின் பட ஷூட்டிங்கை நிறுத்திய பெண் அதிகாரி…என்னம்மா இப்பிடி பண்ணிட்டீங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகராக மாறியுள்ளவரே நடிகர் ராம் சரண். இவரது படங்களிலே நம் யாவராலும் மறக்க முடியாத ஒரு படமாக இருப்பது 'மாவீரன்' படம். இப்படமானது இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

இவருக்கு இயல்பாகவே இருக்கின்ற இவரது பாடி லாங்குவேஜ் காரணமாக இவர் தற்போது டோலிவுட்டிலும் ரசிகர்களின் பேவரிட் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகின்றார். 'மாவீரன்' படத்தை போன்றே சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படமும் இவரது ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராம்சரண் சீதாராம ராஜு என்ற போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றார்.

இந்நிலையில் ராம் சரண் தற்போது பிரபல இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் உருவான புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கர் தெலுங்கிலும் கால் பதித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோரும் நடித்துள்ளனர். அத்தோடு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கின்றார். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகின்றது. ஆனால் தற்போது ஒரு பெண் அதிகாரியினால் இப்பட சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பள்ளிக் கூடத்தில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது.

அங்கு வந்த அப்பகுதியில் நகராட்சி அதிகாரியான அகுலா ஸ்ரீவாணி என்பவர் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்தார். அத்துடன் "மாணவர்களின் படிப்பை பாதிக்கும் வகையில் நடக்கும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்ககூடாது" எனவும் கோபத்துடன் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஷங்கர்-ராம்சரண் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த மா நில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்தியா ரெட்டி மீது விமர்சனம் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே சில நாட்களுக்கு தற்காலிகமாக இப்படத்தினுடைய ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement