• May 20 2024

கண்ணம்மா வீட்டுக்குச் சென்ற பாரதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி- லக்ஷ்மியும் ஹேமாவும் எடுத்த அதிரடி முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். அதாவது கண்ணம்மா எனக்கு உங்க கூட சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கிளம்பி வருகின்றார்.

கண்ணம்மாவின் பிரிவைத் தாங்க முடியாது பாரதியும் விழுந்து விழுந்து அழுகின்றார். தொடர்ந்து வீட்டுக்கு வந்த கண்ணம்மாவிடம் ஹேமாவும் லக்ஷ்மியும் அப்பா இப்படி பண்ணுவார் என்று நினைக்கல. எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிற எங்களுக்கு யாரும் வேணாம் இங்க இருந்து பேயிடலாம் என்று கூற அதற்கு கண்ணம்மாவும் சரி என்கிறார்.


பின்னர் வீட்டுக்கு வரும் பாரதி நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். வெண்பா பேச்சை கேட்டு இப்படி பண்ணிட்டனே நான் வடிகட்டின முட்டாள் எல்லாம் அவளால தான் அந்த வெண்பாவால் தான் என தன்னைத் தானே திட்டிக் கொண்டு இருக்கின்றார்.

இதற்கு வேணு பாரதிக்கு அட்வைஸ்ட் பண்ணினார்.அத்தோடு சௌந்தர்யாவும் அவரை சமாதானம் செய்கின்றார்.கண்ணம்மாவுக்கு மனசு மாறும் அவ உன்கூட சேர்ந்து வாழுவா கொஞ்சம் அவளுக்கு காலம் கொடு.நாங்க இருக்கிறோம். என்னை அவளுடன் சேர்த்து வைப்போம் என நம்பிக்கை கொடுக்கின்றனர்.


இதன் பின்னர் பாரதி கண்ணம்மா மற்றும் ஹேமா லக்ஷ்மியின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு அழுகின்றார். அதே போல கண்ணம்மாவும் அதை பற்று யோசிச்சுக் கொண்டு இருக்கின்றார்.அடுத்த நாளே பாரதி கண்ணம்மா தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கடவுளிடம் வேண்டுகின்றார். பின்னர் குடும்பமாக சேர்ந்து கண்ணம்மாவை அழைப்பதற்காக அவருடைய வீட்டிற்கு முன்னால் நிற்கின்றனர்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement