• Jun 05 2025

சுதாகரின் சுயரூபத்தை அறியும் இனியா; கட்சியிலிருந்து தூக்கப்பட்ட கவுன்சிலர்! தொடரும் வன்மம்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செல்வி பாக்கியாட வந்து அந்தக் கவுன்சிலர கட்சியில இருந்து தூக்கிட்டாங்க என்று சொல்லுறார். மேலும் நம்ம ஹோட்டலில நடந்த பிரச்சனை தான் இதுக்கு காரணம் என்று எல்லாரும் சொல்லுறாங்க என்ன செய்யுறது என்று தெரியல என்கிறார். செல்வி இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்க கவுன்சிலர் வந்து நிற்கிறார். இதனை அடுத்து கவுன்சிலர் பாக்கியாவப் பாத்து நான் 23 வருசமா கட்சியில இருக்கிறேன். இப்ப உன்னால கட்சியில இருந்து என்னைத் தூக்கிட்டாங்க என்கிறார்.

அதைக் கேட்ட பாக்கியா உங்கள கட்சியில இருந்து தூக்கினதுக்கு நான் காரணம் இல்ல நீங்க செய்த வேலைதான் காரணம் என்று சொல்லுறார். மேலும் உங்க மேல நடவடிக்கை எடுக்க நான் சொல்லவே இல்ல என்கிறார். அதனை அடுத்து கவுன்சிலர் அப்புடியே நல்லவள் மாதிரி நடிக்காத என்ன கட்சியில இருந்து வெளியில அனுப்பினதுக்கு நீ மட்டும் தான் காரணம். இனிமேல் உனக்கு கெட்ட நேரம் மட்டும் தான் என்று கோபமாகச் சொல்லுறார்.


இதனைத் தொடர்ந்து சுதாகர் தான் பாக்கியாவோட ரெஸ்டாரெண்டை வாங்கினார் என்ற விஷயம் இனியாவுக்கு தெரியவருது. பின் இனியா சுதாகர் கிட்ட வந்து அம்மாவோட ரெண்டாவது ரெஸ்டாரெண்டை மட்டும் தான் நீங்க வாங்கியிருக்கீங்க என்று நினைச்சன் முதலாவது ரெஸ்டாரெண்டையும் நீங்க தான் வாங்கினீங்களா என்று கோபமாக கேட்கிறார்.

அதைக் கேட்ட சுதாகர் இனியாவப் பாத்து உங்கட அம்மா இப்ப திறந்த ரெஸ்டரெண்டை எப்ப மூடப்போறா என்று கேட்டு சொல்லு என்கிறார். அதனை அடுத்து இனியா பாக்கியா வீட்ட வந்து சுதாகர் தான் உன்ட ரெஸ்டாரெண்டை வாங்கினார் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா நீ அதைப் பற்றி எல்லாம் ஜோசிக்காதா என்கிறார். பின் கோபி, ஆரம்பத்திலேயே பாக்கியா இதை எல்லாம் சொன்னால் நான் தான் நம்பேல என்று கோபமாகச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement