• Jun 05 2025

மீனா சொன்ன விஷயத்தால் ருத்ரதாண்டவம் ஆடும் முத்து..! கல்யாண வேலைகளை திட்டமிடும் விஜயா.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சீதா வீட்டுக்கு வந்து அருணின்ட அம்மா மீனாவைப் பாத்து எப்புடியாவது உன்ர புருஷன் கிட்ட பேசும்மா என்ர பிள்ளை உண்மையிலேயே நல்ல பிள்ளை என்று சொல்லு என்கிறார். மேலும் சீதா மாதிரி ஒரு பொண்ணு என்ட பையனுக்கு கிடைக்கமாட்டால் என்கிறார். இதைக் கேட்ட மீனா சரி அம்மா நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நான் பாத்துக்கிறேன் என்று சொல்லுறார். 

இதனை அடுத்து மனோஜ் தன்ர friend கிட்ட போய் நீ சொன்ன மாதிரி பொண்டாட்டி வேற யாருகூடயாவது போயிடுவா என்று பயமா இருக்கு என்கிறார். மேலும் என்ர பொண்டாட்டியும் யாரோ மகேஷ் கூட சந்தோசமா கதைச்சுக் கொண்டிருக்கிறா அதுதான் பயமா இருக்கு என்கிறார். அதனைத் தொடர்ந்து ரோகிணிக்கு மனோஜ் தன்மீது சந்தேகப்படுறார் என்ற விஷயம் தெரியவருது. 


பின் விஜயா பார்வதி வீட்ட போய் நான் மனோஜுக்கு நீத்துவை கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்டு பார்வதி ஷாக் ஆகுறார். மேலும் இந்த விஷயம் ரோகிணிக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் என்று தெரியுமா என்கிறார். அதுக்கு விஜயா இந்த ரோகிணியை விரட்டி விட்டுட்டு நீத்துவை கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன். அவள் உண்மையான பணக்காரி அப்ப மனோஜ் சந்தோஷமான வாழ்க்கை வாழுவான் என்கிறார்.

அதனை அடுத்து மீனா முத்துவைக் கூப்பிட்டு சீதா அருண் வீட்ட போய் மாமாக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணமாட்டேன் என்று சொல்லிட்டால் என்கிறார். அதைக் கேட்ட முத்து இப்பதான் சீதா ஒரு நல்ல முடிவெடுத்திருக்கிறாள் என்று சொல்லுறார்.  மேலும் காலில வந்து கதறினாலும் நான் அருணை கல்யாணம் பண்ண ஒத்துக்கமாட்டேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement