• Sep 21 2024

பையன் வீட்டை விட்டு போனதால் அழுதேன்-தாமரையின் கணவர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நாடக கலைஞரான தாமரை பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். தனது வெகுளித்தனமான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி புரிதல் இல்லாத தாமரை, நாளடைவில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களே டாஃப்பான போட்டியாளர் என்று சொல்லும் வகையில் விளையாடினார்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்வாறு இருக்கையில் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் நினைத்தார்கள், ஆனால் அவரை விட கடுமையாக விளையாடி பாலாஜி அல்டிமேட் நிகழ்ச்சி பட்டத்தை வென்றுவிட்டார்.

இந்நிலையில் தற்போது BB ஜோடிகளில் தனது கணவருடன் கலந்து கொண்டு சிறப்பான நடனத்தை ஆடி வருகின்றார்.இவ்வாறு இருக்கையில் ஒரு நேர்காணலில் இவரின் மகன் பற்றி பல கேள்விகள் கேட்டக்கப்பட்டது.பையனை பார்த்தீங்களா..? பேசுனீங்களா..? என கேட்டதும் அவனை பார்க்கவில்லை வீடியோ கோல் பண்ணி பேசினேன் என கூறினார் தாமரை. ஏன் நேரில் பார்க்கவில்லை என கேட்டதும் அவர் வரமாட்டேங்கிறார் என்று தாமரை கூறினார்.

இவ்வாறு தாமரையிடம் கேள்வி கேட்ட பின்னர் தாமரையின் கணவரிடம் கேள்வி கேட்க்கப்பட்டது.நீங்க போய் பார்த்தீங்களா என கேட்டதும் எனது இரண்டாவது பையனை விட இவன் மீது தான் பாசம் அதிகம் இரண்டரை வயதில் இருந்து இவனை பார்த்துக் கொள்கின்றேன்.இவங்க நிகழ்ச்சிக்கு போனால் கூட நான் தான் பார்த்துக்கொள்வேன்.இப்ப அவன் என் கூட பேசுறது இல்லை .இவன் போகும் போது இவனை போகாதேயடா என்று கேட்டேன் .அவனும் நானும் ப்ரண்ட்ஸ் மாதரி தான் பழகினோம்.திரும்பி வந்திடுவேன் என கூறினான்.

ஆனால் அவன் போயிட்டு வறன் எண்டவன் தான் இப்ப ரிசி வாங்கிட்டு போயிட்டான்.தற்போது அவனுக்கு 14 வயது ஆகுது. அவன் எங்களை விட்டு போய் 6மாதம் ஆகுது.இவனும் தாமரையும் பேசுறாங்க.நான் எப்ப ஆச்சும் போன் பேசுவேன்.இப்ப தான் அவனுக்கு நான் அப்பா இல்லை என்று பரியுது.இவன் போனதும் இரண்டு நாள் நான் தொடர்ந்து அழுதேன் என கூறியுள்ள விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement