• Sep 05 2025

ஜெயிலுக்குள் இருக்கும் பசுபதியை வம்பிழுக்கும் காவேரி..! ஆரம்பமாகும் அதிரடி ஆட்டம்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனங்களைக் கவர்ந்தது மகாநதி. இந்த சீரியலில் இன்று விஜயை பிரிந்து வீட்ட வந்த காவேரி அவரை நினைத்து அழுதுகொண்டிருக்கிறார். இப்புடியாக  இன்றைய எபிசொட் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது தற்பொழுது நாளைய எபிசொட்டிற்கான promo வெளியாகியுள்ளது.


அதில் காவேரி ஜெயிலில இருக்கிற பசுபதியை பார்க்கிறதுக்காக போறார். பின் பசுபதியை பார்த்த உடனே காவேரி கோபத்தோட இதே இடத்தில என்ர புருஷனை நிக்க வைச்சா எல்லோ அதுக்கு பதிலடி தான் இப்ப உனக்கு நடந்திருக்கு என்கிறார்.


அதைக் கேட்ட பசுபதி இன்னும் ரெண்டே நாளில வெளியில வந்து காட்டுறேன் என்று சொல்லுறார். இதனை தொடர்ந்து காவேரி பசுபதியை பார்த்து இவ்வளவு அடிபட்டும் நீ இன்னும் திருந்தேல என்கிறார். இதுதான் தற்பொழுது வெளியான promoவில் இடம்பெற்றுள்ளது. 


Advertisement

Advertisement