தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து தற்போது சினிமா விமர்சகராக தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார் பயில்வான் ரங்கநாதன். இவர் நடிகர், நடிகைகள் பற்றியும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
இந்த நிலையில், நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யாவின் குடும்பத்தைப் பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், சமீபத்தில் திவ்யா சத்யராஜ் அவர்கள் நான் அவருடைய தந்தையிடம் நிறைய காசு வாங்கி விட்டு பேசுவதாக கூறியுள்ளார். இதை பார்த்து என்னுடைய நண்பர் எனக்கு அந்த ஸ்டேட்மெண்ட்டை அனுப்பியிருந்தார். ஆனால் நான் ஒரு நாளும் சத்யராஜிடம் ஒரு பைசா கூட வாங்கியதில்லை. இது என் தாய் மீது சத்தியம்.
திவ்யா சத்யராஜ் திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது யாருக்காவது தெரியுமா? அவரின் திருமணம் 50 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டது.

திவ்யா சத்யராஜின் கணவர் வேறு யாருமில்லை. சத்யராஜ் உடன்பிறந்த சகோதரியின் மகனைத்தான் திவ்யா சத்யராஜ் திருமணம் செய்தார். ஆனால் தாலி கட்டிய ஐந்தாவது நிமிடத்திலேயே கழுத்தில் இருந்த தாலியை பறித்து சத்யராஜ் முகத்திலேயே விசிறி விட்டு போய்விட்டார். ஆனால் இது நிறைய பேருக்கு தெரியாது.
திவ்யா சத்யராஜுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. சத்யராஜ் பிளாட் ஒன்று கோயம்புத்தூரில் உள்ளது. அந்த பிளாட் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் உள்ளது. அந்த ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குறிப்பிட்ட 50 பேரை கூப்பிட்டு திருமணம் நடத்தி இருக்கிறார்.
திவ்யா சத்யராஜின் கணவர் வேறு யாரும் இல்லை. சத்யராஜின் உடன்பிறந்த சகோதரியின் மகனைத்தான் திவ்யா சத்யராஜுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

இது நிறைய பேருக்கு தெரியாது. அதற்குப் பிறகு சத்யராஜின் பேச்சை கேட்டு கணவருடன் வாழ்ந்து வந்தார். கிட்டத்தட்ட 10–15 வருடங்கள் அவரோடு வாழ்ந்தார். ஆனால் அவருடைய கணவர் தினமும் டார்ச்சர் வாங்கி இருக்கிறார்.
ஒரு மனிதன் எவ்வளவு நாள்தான் பொறுமை காக்க முடியும்? சத்யராஜுக்காக பொறுமையாக இருந்த மருமகன் ஒரு நாள் பொறுமை இழந்துவிட்டார். கடைசியில் 14 வருடங்கள் கழித்து “மாமா என்னை விட்டுருங்கள், இனிமேல் என்னால் அடிய வாங்கி சாக முடியாது” என்று சொல்லி விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இது தான் திவ்யா சத்யராஜின் வாழ்க்கை என்று பயில்வான் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மையா பொய்யா என்று தெரியாமல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!