தீபாவளி என்றாலே புதிய படங்கள் ரிலீஸாவதற்கு தயாராக வரிசை கட்டி நிற்பது வழமை. இப்பண்டிகை தினத்தில் வெளியாகும் படங்களை பார்க்க ரசிகர்களிடமும் அதிக ஆர்வம் காணப்படும். இந்நாளில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செல்வதும், மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒன்றாக அமைந்துவிட்டது.
அந்தவகையில் இந்தவருடமும் பல புதிய படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. அதாவது தமிழில் கார்த்தியின் 'சர்தார்' திரைப்படமும், சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படமும் முன்னுரிமையில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது இந்தாண்டு கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் மட்டுமே தமிழில் வெளியாகின்றன.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்களில் சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அந்தவகையில் நாளை முதல் 21-ஆம் தேதி சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. தினமும் 7 காட்சிகள் வரை திரையிட்டுக் கொள்ளலாம் என்றும் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கார்த்தியின் ரசிகர்கள் எந்தளவிற்கு சந்தோசத்தில் உள்ளனரோ அந்தளவிற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும், நாளை FDFS பார்க்கவும் ரசிகர்களிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதனால் திரையரங்குகளில் FDFSக்கான டிக்கெட் புக்கிங்கள் இப்போதிலிருந்தே தொடங்கியுள்ளனர். இவ்வாறாக தீபாவளி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் மிகுந்த குஷியில் உள்ளனராம்.
Listen News!