• May 20 2024

சூர்யாவின் தாயார் விடுத்த சவால்... வெண்ணிலாவிற்கு மறு கல்யாணம் பண்ண முடிவெடுத்த தந்தை... அதிரடித் திருப்பங்களுடன் 'காற்றுக்கென்ன வேலி' சீரியல்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த  கதைப்படி தற்போது கல்லூரியில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு வெண்ணிலாவும் சூர்யாவும் காரில் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஒரு ரவுடிக் கும்பலிடம் மாட்டுப்பட்டிருக்கின்றனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சூர்யாவின் அம்மா வெண்ணிலாவின் தந்தையைப் பார்த்து "என் பையனுக்கு இன்னும் ஆயிரம் பொண்ணுங்கள கொண்டு வந்து நிறுத்த முடியும், ஆனால் உன் பொண்ணுக்கு ஒரே ஒரு மாப்பிள்ளையை உன்னால கொண்டு வர முடியுமா..?" எனக் கேட்கின்றார்.


பதிலுக்கு வெண்ணிலாவின் தந்தை "நிருதும்மா, இப்ப சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க, உங்க பையன் கல்யாணத்துக்குள்ள என் பொண்ணுக்கும் கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன், மான ரோஷத்தில் இந்த ஜமீன் வாரிசு பல மடங்கு மேல் என்று காட்டுறேனா..? இல்லையானு பாருங்க" என பதிலுக்கு சவால் விட்டு செல்கின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement