• May 19 2024

சாய் பாபாவின் அருள் பெற்ற விஜய் பட நடிகை... அவரே கூறிய ஆச்சரியமான தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இந்தியத் திரைப்பட நடிகைகளில் ஒருவர் நடிகை இந்திரஜா. இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் சிறப்பாக அறியப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாது ஒரு சில தமிழ் படங்களிலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.


அந்தவகையில் தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பின்னர் சீரியல்களில் அதிகம் கவனம் ஈர்த்தவர். இவருக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லையாம்.

பல சிக்கல்கள், வேதனைகள் பட்டே உயர்ந்துள்ளார். மேலும் விஜய் நடித்த 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் அஜித்தும் நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இந்திரஜா நடித்திருந்தார்.


அதன் பின் 'எங்கள் அண்ணா' என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அதனை தொடர்ந்து முழுக்க முழுக்க சீரியல்கள் தான் தனது கவனத்தை செலுத்தி இருக்கின்றார். அதாவது 'பாசம்' சீரியலின் மூலம் அவரின் சின்னத்திரை பயணம் தொடங்கியது.

இவ்வாறாக படங்கள், சீரியல்கள் எனப் பல வழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த நடிகை இந்திரஜா சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தனக்கு சாய் பாபா பல வழிகளிலும் காட்சி கொடுத்ததாக கூறிய விடயம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. 


இது தொடர்பாக அவர் கூறுகையில் "நான் பாபாக்கிட்ட எல்லாத்தையுமே ஓபன் ஆக பேசுவேன், திருமணத்திற்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் லேடீஸ் ப்ரோப்ளம்ஸ் இருந்திச்சு.

அந்த சமயத்தில் நான் குட்டப் பருத்தி பாபாவோட போட்டோவை என் வயித்துக்கு கிட்ட வைச்சுக்கிட்டு "நான் காலையில எழும்பும்போது என் உடம்பில உள்ள பிரச்சினை எல்லாம் ஒளிஞ்சிடனும்" என்று வேண்டிக்கிட்டேன். மறுநாளே எனக்கு அந்தப் பிரச்சினை பாபா அருளால் சரி ஆகிடிச்சு.

அதேபோல நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காலத்தில் ஜூன் 16,17 இல் டாக்டர்ஸ் தேதி குறிச்சு கொடுத்திருந்தாங்க. எனக்கு இருந்த எண்ணமே நோர்மல் டெலிவரி ஆகணும் என்பது தான்.

அந்த சமயத்தில் தான் ஒரு சிலர் சொன்னார்கள் சாய் பாபாவின் புக்கம் ஒன்றினை ஒரு கிழமைக்குள் படித்து முடிக்குமாறும், அப்படி முடித்து விட்டால்  கூறினார்கள். நீங்க நினைக்கிறதை பாபா நிறைவேற்றி வைப்பார் எனக் கூறி இருந்தார்கள். 

நானும் அந்த புக் முடிச்சதுக்கு அப்புறமாக திரும்பவும் குட்டப் பருத்தி பாபாவோட போட்டோ கிடைச்சது. அந்தப் போட்டோவை பார்த்ததும் நான் புரிஞ்சுக்கிட்டேன் இதை என்னோட வைச்சிருக்க சொல்லுறார் என்று, நானும் அதையே வைச்சு இருந்தேன்.

அதைத் தொடர்ந்து எனக்கு நோர்மல் டெலிவரி தான் நடந்திச்சு, நோர்மல் டெலிவரிக்கான அறிகுறி எதுவும் இல்லாமலேயே குழந்தை நல்லபடியாக பிறந்து இருக்கு என்றால் இதற்கு காரணமே அந்த பாபா தான்" என்று கூறியிருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது "குழந்தை பிறந்த அன்றைக்கே ஸ்டேப் ஏறி நடந்து மேல இருந்த ரூம்க்கு தனியாக சென்றிருக்கின்றேன், இது எல்லாமே அந்த சாய் பாபாவோட துணை தான்" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் "அவருடைய கருணையால் சீரடிக்கு 5வருசமாக தொடர்ந்து போகக் கூடிய வாய்ப்பு  குடும்பத்திற்கு கிடைத்தது.

அத்தோடு எனக்கு அம்மாவுக்கு அம்மாவாக அப்பாவிற்கு அப்பாவாக எல்லாமாக இருந்து இன்றைக்கு வரைக்கும் என்னை ஒரு அணுவாக இருந்து பார்த்துக்கிறது அந்த சாய் பாபாதான்" என மிகவும் உணர்ச்சி பொங்க கூறியிருக்கின்றார் நடிகை இந்திரஜா.

Advertisement

Advertisement