• Jun 21 2025

பேயும் இருக்கும்.. கவர்ச்சியும் இருக்கும்.. ’அரண்மனை 5’ அப்டேட் கொடுத்த சுந்தர் சி..

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்த ’அரண்மனை 4’திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’அரண்மனை 4’ படம் வெற்றி பெற்றால் ’அரண்மனை 5’ கண்டிப்பாக வரும் என்று ஏற்கனவே சுந்தர் சி பேட்டிகளில் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்துள்ளார்.

’அரண்மனை 5’ திரைப்படம் விரைவில் உருவாகும் என்றும் அதே நேரத்தில் ’அரண்மனை’ படத்தின் மற்ற பாகங்களில் இருந்தது போலவே ’அரண்மனை 5’ படத்திலும் கவர்ச்சியும் இருக்கும் பேயும் இருக்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு பேய் படத்தை கிளாமராகவும் காமெடியாகவும் கொண்டு செல்லலாம் என்பதை முதன் முதலில் ’அரண்மனை’ படத்தின் மூலம் தான் சுந்தர் சி ஆரம்பித்த நிலையில் அதன் நான்கு பாகங்களும் அதே ரீதியில் தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

’அரண்மனை’ என்ற பெயரில் மட்டுமே ஒற்றுமை இருந்தாலும் நான்கு பாகங்களும் நான்கு விதமான கதை அம்சம் கொண்டது என்றும் அதேபோல்தான் ஐந்தாம் பாகமும் இருக்கும் என்றும் அரண்மனை ஐந்தாம் பாகத்திலும் இரண்டு முன்னணி நடிகைகள் நடிப்பார்கள் என்றும் அவர்களிடமிருந்தும் கிளாமரை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அரண்மனை ஐந்தாம் பாகத்தில் நடிக்கும் இரண்டு நடிகைகளில் ஒருவர் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலிலா என்றும் கூறப்படுகிறது. இன்னொருவர் தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement