• Jun 27 2024

திடீரென வெளிநாடு கிளம்பிய அஜித்.. இனி முடித்துவிட்டு தான் திரும்புவார்.. வைரல் புகைப்படம்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் அடுத்த வாரம் முதல் அஜர்பைஜானில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியானது.

நேற்று கூட அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பேட்டி அளித்த போது ’விடாமுயற்சி’ படக்குழுவினர் ஏற்கனவே அஜர்பைஜான் சென்றுவிட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அஜித் அஜர்பைஜான் செல்லுவார் என்றும்,  ’விடாமுயற்சி’ படபிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு தான் சென்னை திரும்புவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இன்று அதிகாலை நடிகர் அஜீத், அஜர்பைஜான் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்த போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜர்பைஜானில் 40 நாட்கள் 'விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் 'விடாமுயற்சி’ படத்தை முடித்துவிட்டு தான் அஜித் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.



மேலும் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் எனவே அஜித் ரசிகர்கள் வரும் தீபாவளி அன்று ‘விடாமுயற்சி’ மற்றும் பொங்கல் அன்று ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படத்தையும் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Advertisement

Advertisement