• May 19 2024

ஜெயிலர் படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு சூப்பர் கிப்டை வழங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம்- என்ன பரிசு தெரியுமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். 

இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார் .


ஜெயிலர் படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த நிலையில் சமீபத்தில் தான் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

படம் அதிகம் லாபம் கொடுத்த நிலையில் ரஜினி, நெல்சன், அனிரூத் ஆகியோருக்கு சொகுசு கார் மற்றும் லாபத்தில் பங்கு செக் என்பனவற்றை இப்படத்தின் கலாநிதி மாறன் வழங்கியிருந்தார்.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் பணியாற்றிய படக்குழு 300 பேரை வரவைத்து விழா நடத்தி அனைவருக்கும் கிப்ட் கொடுத்து இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.ஜெயிலர் என பொறிக்கப்பட்ட தங்க காசு தான் கிப்ட் ஆக கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement