• May 22 2024

பாடகர் கே.கே யின் மரணத்துக்கான காரணம் பற்றி மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் தான் கே கே என அழைக்கப்படும் கிருஷ்ண குமார். இவர் கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு இவரின் இறப்பிற்கு திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அஞ்சலிகளை செலுத்தினர்.

இந்நிலையில் தற்போது அவரின் இறப்புக்கான காரணம் பற்றிய மருத்துவர்களின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கே கேவின் இதயத்தில் இடது தமனியில் 80 சதவீத அளவுக்கு அடைப்புகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதைத் தவிர்த்து வேறு சில சிறு அடைப்புகளும் இருந்தது தெரியவந்துள்ளது. இவையே மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பதும் முக்கியமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement