• Apr 28 2024

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்துவுடன் கைகோர்த்த பாடகி சித்ரா- அடடே இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பிரபல்யமான பாடகி தான் சித்ரா. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் பாடி தனது திறமையை நிரூபித்து இருக்கின்றார்.

தற்பொழுதும் பல பாடல்களைப் பாடிடி வரும் இவர் இறுதியாக தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ என்னும் பாடலைப் பாடியிருந்தார். இப்பாடலுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.


இந்த நிலையில் சித்ரா கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளில் ஜி.வி பிரகாஷ் இசையில் தங்கர் பச்சான் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன என்னும் பாடலைப் பாடியுள்ளார். 

39 வருடத்திற்குப் பிறகு வைரமுத்துவும் சித்ராவும் ஒன்றிணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். இப்பாடல் விரைவில் ரிலீஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement