• Apr 28 2024

பொது இடத்தில் லிப்லாக் முத்தம்.. பதிலடி கொடுத்த ஸ்ரேயா சரண்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்ரேயா சரண் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 


அதன் பின் 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.


இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா திரிஷ்யம் 2 பட விழாவுக்கு கணவருடன் வந்திருந்தார். அப்போது அவர்கள் இருவரும் எல்லோர் முன்பும் லிப்லாக் முத்தம் கொடுத்துக்கொண்டது வைரல் ஆனது.


ஸ்ரேயா சரண் மற்றும் அவரது கணவர் பொது இடத்தில் இப்படி செய்ததை நெட்டிசன்கள் மோசமாக ட்ரோல் செய்தனர். இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதாகவும் விமர்சனம் செய்தனர்.


இந்நிலையில் இந்த விஷயம் பற்றி ஸ்ரேயா பதிலடி கொடுத்திருக்கிறார். சேனல் ஒன்றிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் "இது funny ஆக இருக்கிறது. ஸ்பெஷல் நேரத்தில் கிஸ் செய்வது நார்மல் என கணவர் நினைக்கிறார். அது அழகான விஷயம் என நான் நினைக்கிறேன். மிகவும் natural ஆன ஒரு விஷயத்திற்கு ஏன் ட்ரோல் செய்கிறார்கள் என கணவருக்கு புரியவில்லை."


"இது பரவாயில்லை. நான் மோசமான கமெண்டுகளை படிப்பதில்லை, அதற்கு பதிலளிப்பதும் இல்லை. ட்ரோல் செய்வது அவங்க வேலை, அதை avoid செய்வது என் வேலை. நான் செய்யவேண்டியதை தான் செய்தேன்" என ஸ்ரேயா கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement